
ஷாருக்கான் சேர்ப்பு
இந்நிலையில் நேற்று திடீரென தமிழக வீரர் ஷாருக்கானையும் முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்ப்பதாக பிசிசிஐ அறிவித்தது. சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியதன் அடிப்படையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஃபினிஷர் பணிக்காக ஹூடா சேர்க்கப்பட்டுள்ள சூழலில் அவரை புறக்கணித்துவிட்டு ஷாருக்கானை அந்த இடத்திற்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவியும் விமர்சனங்கள்
இந்த முடிவுக்காக வட இந்திய ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் சண்டைப்போட்ட அவர்கள், சையது முஷ்டக் அலி எனும் ஒரு தொடரில் சிறப்பாக ஆடிவிட்டால், உடனே சர்வதேச போட்டியில் வாய்ப்பு கொடுத்துவிடுவதா, அப்படி என்ன செய்துவிட்டார் அந்த ஷாருக்கான். மயங்க் அகர்வால், ஹூடா போன்ற சீனியர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் போது, நேற்று வந்த வீரர்களுக்கெல்லாம் வாய்ப்பு தரக்கூடாது. அவர்களை புறக்கணிக்க வேண்டும் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஏன் ஷாருக்கான் தேவை
ஆனால் விமர்சிக்கும் அளவிற்கு ஷாருக்கானின் புள்ளிவிவரங்கள் இல்லை. கடந்த சையது முஷ்டக் அலி கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடிய ஷாருக்கான், 253 ரன்களை குவித்தார். அவரின் சராசரி 42.16 ஆகும். இந்த தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசியவரும் ஷாருக்கான் தான். இதே போல ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு பஞ்சாப் அணிக்காக லோயர் ஆர்டரில் விளையாடிய அவர், 11 போட்டிகளில் 153 ரன்களை அடித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 134.21 ஆகும்.
Recommended Video

அடுத்த ஃபினிஷர்
இதுமட்டுமல்லாமல் ஹர்திக் இல்லாத இந்த சமயத்தில் இந்திய அணியின் சிறந்த ஃபினிஷராக ஷாருக் மட்டுமே இருப்பார். இதற்கு உதாரணம் சையது முஷ்டக் அலி இறுதிப்போட்டியில் தமிழக அணி வெற்றி பெற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சிக்ஸர் விளாசி சாம்பியன் பட்டம் வென்றுக் கொடுத்தார். அந்த தொடரில் மொத்தம் 20 சிக்ஸர்கள், ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 சிக்ஸர்கள் என கடைசி நேரத்தில் பெரியளவில் ரன் குவிக்கிறார். எனவே அவர் தான் அடுத்த தோனி என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications