
கவனம் பெற்ற கேப்டன்சி
வெஸ்ட் இண்டீஸுன் பேட்டிங் வரிசை மிகவும் பலமானது. கடைசி வரிசை பேட்ஸ்மேன் கூட அதிரடி காட்டும் வகையில் அமைந்திருக்கும். அப்படி இருக்கையில் ஒவ்வொரு ஓவரின் போதும், பேட்ஸ்மேனின் நகர்வுகளை புரிந்துக்கொண்டு ஃபீல்ட் செட்டிங் செய்து ரோகித் சர்மா விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ப்ரெண்டன் கிங்கின் விக்கெட் தான் தனி கவனம் ஈர்த்துள்ளது.

மாஸ்டர் ஸ்கெட்ச்
ஆட்டத்தின் 12வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். அதில் முதல் பந்தில் டேரன் பிராவோ சிங்கிள் அடிக்கும் போது ஸ்கொயர் லெக் மற்றும் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டர்கள் இல்லை. ஆனால் 2வது பந்தில் ப்ரெண்டன் கிங் பேட்டிங்கிற்கு வந்த போது அவரின் உடல்மொழி சிங்கிள் ஆடப்போகிறார் என புரிந்துக்கொண்டு ரோகித் உடனடியாக ஃபீல்ட் செட்டிங்கை மாற்றினார். அதாவது பேட்ஸ்மேனுக்கு அருகில் இருக்கும் மிட் விக்கெட் மற்றும் ஸ்கொயர் லெக் திசையில் வீரர்களை நிற்கவைத்தார்.
திகைத்துப்போன எதிரணி வீரர்
அவர் நிற்கவைத்தப்பின் வாஷிங்டனிடம் ஸ்லோவர் பந்து போடக்கூறியுள்ளார். அதன்படி 2வது பந்தை ரோகித் நினைத்தது போலவே ப்ரெண்டன் லெக் திசையில் சிங்கிள் அடிக்க முற்பட்டார். பந்து வழக்கமான வேகத்தில் வரும் என நினைத்து அவர் பேட்டை சுழற்ற, வாஷிங்டன் சுந்தர் போட்ட ஸ்லோஃபர் பந்து எட்ஜாகி சரியாக மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவின் கையில் சிக்கியது. தனது விக்கெட் எப்படி விழுந்தது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்றார்.

உதவிய கோலி
ரோகித் சர்மாவின் இந்த வியூகத்திற்கு பின்னால் விராட் கோலியும் பக்கபலமாய் இருந்தார். பந்துவீசுவதற்கு முன்னதாக ரோகித்தின் ஃபீல்ட் செட்டிங் சரியாக உள்ளதா என பல முறை சரிபார்த்து அவரிடம் ஓகே வா என்றுக் கேட்டார். மேற்கூறிய மொத்த விஷயங்களும் வீடியோவாக இணையத்தில் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications