போர்ட் ஆப் ஸ்பெயின்: மழை காரணமாக இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா ஆனதால் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இரு அணிகள் மோதிய 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ட்ரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாளில் 22 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது.
இதனிடையே தொடர் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. களத்தில் பிராத்வெயிட் 32 ரன்னிலும், சாமுவேல்ஸ் 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், 2-ம் நாள் மற்றும் 3-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது. தொடக்கம் முதலே மழை விட்டு விட்டு பெய்ததால் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 4-வது நாளும் மழை காரணமாக நாள் முழுவதும் ஆட்டம் கைவிடப்பட்டதால், போட்டியை கைவிடுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். இதனால் டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா வென்றது. தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாளில் 22 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது.
இதனிடையே தொடர் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. களத்தில் பிராத்வெயிட் 32 ரன்னிலும், சாமுவேல்ஸ் 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், 2-ம் நாள் மற்றும் 3-வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்டது. தொடக்கம் முதலே மழை விட்டு விட்டு பெய்ததால் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 4-வது நாளும் மழை காரணமாக நாள் முழுவதும் ஆட்டம் கைவிடப்பட்டதால், போட்டி டிராவில் முடிவடைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.