
சிரித்த பத்திரிகையாளர்கள்
கபில்தேவ் மற்றும் அணி மேலாளரை தவிர வேறு யாரும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கவில்லை. உலக கோப்பையை வெல்ல தான் இங்கு வந்து இருக்கிறோம் என்று கபில் தேவ் கூறிய உடன், அங்கிருந்த பத்திரிகையாளர்களும் சிரித்துள்ளனர். அவ்வளவு ஏன், இறுதிப் போட்டிக்கு முன்பே இந்திய அணிக்கு டிக்கெட் போடும் நிகழ்வும் நடந்து இருக்கிறது.

கபில்தேவ் கனவு
ஆனால், கபில்தேவ் புதிய கனவு ஒன்றை கண்டார். தனது கனவை மற்ற வீரர்கள் மனதிலும் விதைத்து, அதனை நம்ப வைத்தார்.போதிய சம்பளம், போதிய உணவு எதும் இல்லாத நேரத்தில் கூட, அப்போதைய இந்திய அணி புதிய சரித்திரத்தை உருவாக்கியது. கபில்தேல் லார்ட்ஸ் பால்கனியில் இன்று உலகக் கோப்பையை தூக்கியது நாள் தான் பிற்காலத்தில் சச்சின் போன்ற பல ஜாம்பவான்கள் உருவாக காரணமாக அமைந்தது.

சச்சின் வாழ்த்து
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், வாழ்க்கையில் சில தருணங்கள் தான் நமக்கு ஊக்கத்தை அளித்து கனவு காண தூண்டும். 1983ஆம் ஆண்டு இதே நாள் உலகக் கோப்பையை வென்றோம். எனக்கு அப்போதே தெரியும் இது தான் என் வாழ்க்கையில் நான் செய்ய வேண்டும்.

விவிஎஸ் லட்சுமண் டிவிட்
இது குறித்து பேசிய விவிஎஸ் லட்சுமண், 1983ஆம் ஆண்டு இதே நாள் தான் நமது கனவு மெய்ப்படும் என்று அனைத்து இந்தியர்களும் உணர்ந்தார்கள். அந்த தருணத்தை நினைத்தால் இன்றும் நமக்கு பெருமையாக இருக்கிறோம். இந்த வெற்றியை பார்த்து தான் என்னை போன்ற மற்றவர்களும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டோம்.


Click it and Unblock the Notifications











