வைரல் ரசிகர்
இந்திய அணி விளையாடி கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் வேறு யாருடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். சும்மா பேசி கொண்டிருந்தால் பரவாயில்லையே,வாயில் பான்பராக்கை போட்டுக் கொண்டு பேசியது தான் இதன் ஹைலைட்டே, இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பட்டது.

கிண்டல்
இந்த காட்சியை ரசிகர்கள் தற்போது ஸ்கிரின்சாட் எடுத்து கிண்டல் செய்து வருகின்றனர். வட இந்தியாவில் பீடா, பான்பராக், புகையிலை போன்ற வஸ்துக்கள் மிகவும் பிரபலம். இதனை வாயில் போட்டு மெண்டு, தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார் அந்த ரசிகர். இந்த ரசிகரை வைத்து மீம்சும், கிண்டலும் இணையத்தளத்தில் பரவி வருகிறது.

கிண்டல்
இந்த காட்சியை ரசிகர்கள் தற்போது ஸ்கிரின்சாட் எடுத்து கிண்டல் செய்து வருகின்றனர். வட இந்தியாவில் பீடா, பான்பராக், புகையிலை போன்ற வஸ்துக்கள் மிகவும் பிரபலம். இதனை வாயில் போட்டு மெண்டு, தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார் அந்த ரசிகர். இந்த ரசிகரை வைத்து மீம்சும், கிண்டலும் இணையத்தளத்தில் பரவி வருகிறது.

மைதானம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த பீடா, பான்பிராக் போன்ற வஸ்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பொது இடத்தில் பயன்படுத்துவது தவறு. ஆனால், வட இந்தியாவில் கிரிக்கெட் மைதானங்கள் அழகாக கட்டப்பட்டு இருந்தாலும், பான் பிராக் நிறுவனத்தின் விளம்பர பலகை தான் அதனை அலங்கரிக்கும். பான் பிராக் போட்டு மைதானத்தை ரசிகர்கள் அசுத்தும் செய்வதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் ரசிகர்
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது பாகிஸ்தான் வீரர் கேட்சை விட்டதால், பாகிஸ்தான் ரசிகர் முகமது சரிம் அக்தர் கொடுத்த ரியாக்சன் உலகம் முழுவதும் வைரலானது. அவரின் மெழுகு சிலை ஹாங்காங் அருங்காட்சியத்திலும் இடம்பெற்றுள்ளது. தற்போது அதே போல் இந்திய ரசிகரும் பிரபலமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











