
அதிவேக பந்துவீச்சாளர்
உலகின் அதிவேக பந்தவீச்சாளர், 150 கிலோ மீட்டருக்கு குறையாமல் பந்துவீச கூடியவர். இந்தியாவின் எதிர்காலம் என்று எல்லாம் உம்ரான் மாலிக்கை முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். உம்ரான் மாலிக்கை பத்திரமாக கையாள வேண்டும் என்று நட்சத்திர வீரர் ஸ்டெயினும் கூறியுள்ளார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் உம்ரான் மாலிக், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பை
டி20 உலககோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறுகிறது. வேகப்பந்துவீச்சு சாதகமான ஆடுகளம் என்பதால், உம்ரான் மாலிக்கை தயார் படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. இதனால் உம்ரான் மாலிக், தென்னாப்பிரிக்காவுககு எதிரான டி20 போட்டியில் அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.

பாக். வீரர் கிண்டல்
இந்த நிலையில், ஒரு காலத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை தொழிற்சாலையில் உருவாக்குவது போல் பாகிஸ்தான் தயாரித்து வந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தானுக்கு இந்தியா டஃப் கொடுக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர் ஷாயின் ஷா ஆஃப்ரிடியிடம் உம்ரான் மாலிக் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரு வார்த்தை கூட பாராட்டாமல், வேகம் உங்களுக்கு உதவாது. ஸ்விங், லைன் லெங்த் மட்டும் தான் உதவும் என கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

உம்ரான் மாலிக் பதிலடி
இதற்கு பதிலடி தரும் விதமாக பேட்டி அளித்த உம்ரான் மாலிக், என்னுடைய ரோல் மாடல்கள் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் கிடையாது. நான் என்னை போலவே சுயமாக செயல்படுகிறேன்,. இந்திய வீரர்கள் முகமது ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் தான் எனது ரோல் மாடல்கள் என்று பேட்டி அளித்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தந்துள்ளார். நாட்டுக்காக சிறப்புக விளையாடி வெற்றியை தேடி தருவதே லட்சியம் என்றும் அவர் பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











