
ஒன்றரை மாத இடைவெளி
ஜூன் 18 முதல் முழுதாக ஒன்றரை மாதத்திற்கு இந்திய அணி சும்மாவே இருக்கப் போகிறது. கேட்கவே அற்புதமான ஷெட்யூலாக இருக்கிறதல்லவா! முதலில் ஒரு டெஸ்ட் போட்டி, அப்புறம் ஒன்றரை மாதம் லீவ். அதே நாட்டில் சும்மாவே இருக்க வேண்டும். அந்த ஒன்றரை மாத கால இடைவெளியில் வீரர்கள் தங்கும் செலவு, உணவு என ஏகப்பட்ட செலவுகளை பிசிசிஐ கவனிக்க வேண்டும்.

ஜுலை 14
சரி.. இந்த உலக லெவல் டூர் பிளான் பற்றி நாம் பெரிதாக பேச வேண்டாம். விஷயத்துக்கு வருவோம். இந்த ஒன்றரை மாத கேப்பில், கிட்டத்தட்ட 20 நாட்கள் இந்திய வீரர்கள் பயோ-பபுளில் இடம் பெற தேவையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜூன் 22ம் தேதி தொடரை முடிக்கும் இந்திய அணி, அதன் பிறகு ஜுலை 14ம் தேதி அசெம்பிள் ஆனால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை அவசியம்
இந்த 20 நாள் இடைவெளியில் வீரர்கள் பயோ-பபுளை விட்டு வெளியேறி, அவர்கள் விரும்பும் இடங்களுக்கு செல்லலாம். எனினும், வைரஸ் அதிகம் உள்ள பகுகுதிகளுக்கு செல்லாமல், வைரஸ் தொற்று குறைவாக உள்ள இடங்களுக்கு செல்வது சிறந்தது. வைரஸ் முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று நினைத்துவிடாமல் முடிந்தவரை எச்சரிக்கையாக, பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்புறம் மாட்டிக்குவீங்க
அதேசமயம், 20 நாள் இடைவெளி இருக்கிறது என்பதால், வீரர்கள் வேறு ஏதும் நாடுகளுக்கு சென்று மாட்டிக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அவர்கள் வேறேதும் நாடுகளுக்கு சென்று, அங்கு வைரஸ் மீண்டும் அதிகரித்தால் அதனால் மீண்டும் இங்கிலாந்து திரும்புவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே வீரர்கள் அப்படி குடும்பத்துடன் வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, வீரர்கள் இங்கிலாந்திலேயே பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்க ஏதுவாக இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் பிசிசிஐ சார்பில் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











