ரோகித் பேட்டிங்
இதனால், இந்திய அணி களமிறங்கும் நாக் அவுட் சுற்றில் ரோகித் சர்மா தனது அதிரடியை காட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும். காரணம், அனைத்து போட்டியிலும் கோலி, சூர்யகுமாரால் அணியை காப்பாற்ற முடியாது. ரோகித் தனது ஸ்பெஷல் இன்னிங்சை ஆடினால் மட்டுமே பெரிய இலக்கை நிர்ணயித்து, இங்கிலாந்துக்கு நெருக்கடி தர முடியும்.
சொதப்பலுக்கு காரணம்?
ரோகித் சர்மா, டி20 உலககோப்பை தொடருக்கு முன்பு எல்லாம் முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடும் யுத்தியை கடைப்பிடித்து வருவதாக கூறினார். அது அவருக்கு நல்ல பலனை தந்தது. ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுவதால், ரோகித் சர்மாவால் தனது அதிரடியை காட்ட முடியவில்லை.
ரோகித் காயம்
இதன் காரணமாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா தனது பேட்டிங்கில் தாக்கததை ஏற்படுத்த இன்று தீவிர பயிற்சியில் இறங்கினார். அப்போது, பந்துவீச்சாளர் எறிந்த பந்து, ரோகித்தின் கையை பதம் பார்த்தது. இதனால் வலியால் துடித்த ரோகித் பேட்டிங் செய்யாமல் அப்படியே ஓரமாக அமர்ந்தார். அதனால் பதறி போன இந்திய அணி நிர்வாகிகள் ரோகித்துக்கு சிகிச்சை அளித்தனர்.
ரசிகர்கள் நிம்மதி
இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா பயிற்சியிலிருந்து பாதியில் விலகினார். இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதன் பிறகு சிறிது நேரத்திலேயே ரோகித் சர்மா மீண்டும் பேட்டிங் பயிற்சி செய்ய வந்தார். இதனை பார்த்ததும் தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ரோகித்துக்கு லேசான காயம் தான் என்றும் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.