தோல்வி பாதை
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 4 மற்றும் 5வது நாட்களில் பேட்டிங்கிற்கு சற்று சாதகமாக இருக்கும் எனத்தெரிகிறது. எனினும் அதற்கேற்றார் போல அதிக ஸ்கோரை அடிக்க இந்திய அணி தவறிவிட்டது. இதனால் 378 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடி காட்டி வருகிறது. 4வது நாள் ஆட்டநேர முடிவு வரை அந்த அணி 259 - 3 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.
பண்ட் மீதான விமர்சனம்
இந்நிலையில் இந்திய அணியின் இந்த சரிவுக்கு ரிஷப் பண்ட்-ன் சதமும் ஒருவகையில் காரணம் என்பது போல ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா அணி ஸ்கோர் உயர்வதற்கு ரிஷப் பண்ட் அடித்த 146 ரன்கள் தான் முக்கிய காரணம். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் 5வது சதம் இதுவாகும்.
என்ன காரணம்
அவரின் 5 சதங்களில் 4 சதங்கள் SENA ( தென்னாப்பிரிக்க, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் அடித்தவை ஆகும். இதில் 3 போட்டிகளில் இந்திய அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. 2 போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு போட்டி சமனில் முடிவடைந்தது. தற்போது அடித்துள்ள 4வது சதத்திலும், தோல்வியை நோக்கி செல்வதால் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
புள்ளிவிவரங்கள்
2018 ஓவல் - தோல்வி
2019 SCG - தோல்வி
2022 நியூலாந்து - டிரா
2022 - ?