
பெங்களூரில் பைனல்
இதையடுத்து மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் இறுதி போட்டி பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

சாய்ஸ்
புனே மற்றும் மும்பை அணிகள் மகாராஷ்டிராவை சேர்ந்தவை என்பதால், தங்களது ஹோம்-கிரவுண்டாக புனே, மும்பை நகரங்களை தவிர்த்து ராய்ப்பூர், ஜெய்ப்பூர், விசாகபட்டணம், கான்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களை தேர்வு செய்ய சாய்ஸ் தரப்பட்டது.

புனேவுக்கு விசாகபட்டணம்
விசாகபட்டணத்தை தங்கள் சொந்த மைதானமாக ஏற்பதாக புனே கூறியது. மும்பை அணி கால அவகாசம் கேட்டிருந்தது. இந்நிலையில், ஜெய்ப்பூரை தங்கள் ஹோம்-கிரவுண்டாக ஏற்க மும்பை இந்தியன்ஸ் முன் வந்துள்ளது.

காலிறுதி
எனவே, இவ்விரு அணிகளும், மும்பை, புனே மைதானங்களுக்கு பதிலாக, ஜெய்ப்பூர், விசாகபட்டணம் மைதானங்களில்தான் ஆடும். முதலாவது காலிறுதி பெங்களூரிலும், 2வது காலிறுதி கொல்கத்தாவிலும் நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











