
நட்சத்திர வீரர்கள்
பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்களான கப்தில், மேக்ஸ்வெல், மார்ஷ், மோர்கன் ஆகிய வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் கூட களத்தில் நிலைத்து நின்று ஆடவில்லை.

20 பந்துக்கும் தகுதியில்லையா
இன்னொரு கொடுமை என்னவென்றால், எந்த ஒரு பஞ்சாப் அணி வீரரும் அதிகபட்சமாக 20 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. இந்த படுதோல்விக்கு வெளிநாட்டு வீரர்களே பொறுப்பேற்க வேண்டும் என அந்த அணியின் செயல்பாட்டு இயக்குநர் சேவாக் தெரிவித்துள்ளார்.

பொறுப்பில்லையே
இதுகுறித்து சேவாக் கூறுகையில், "ஒரு வெளிநாட்டு வீரர் கூட முதல் 15 ஓவர்கள் வரை நிலைக்க வேண்டும் என்ற பொறுப்பை ஏற்கவில்லை. அதற்கான பொறுப்பு அவர்களுடையது தான்" என கூறியுள்ளார் சேவாக்.

தவறு இங்கேதான்
கப்தில் முதல் பந்தில் அவுட்டானது அவருடைய தவறு இல்லை. அதன்பின் வரிசையாக சென்ற வீரர்கள் வேகமாக பெவிலியன் திரும்பியதே மிகப்பெரிய தவறு. இப்படி பொறுப்பில்லாத காரணத்தால் தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











