தகவல்
இவர் மிகவும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் சென்னை அணிக்கு வருவது குறித்து ஏற்கனவே அரசல் புரசலான தகவல்கள் இருந்தது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற போது இவர் விளையாடுவது பிடித்து, டோணி இவரை அணியில் எடுக்க சொல்லி இருக்கிறார். அதன்காரணமாகவே அவருக்கு இந்த திடீர் வாய்ப்பு கிடைத்தது.
அணியில் இல்லை
ஆனால் அவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லோரும் சரியாக பந்து வீசுவதால் இப்போது லுங்கியின் தேவை குறைந்து உள்ளது. தீபக் சாஹர் அணியில் விளையாடாத பட்சத்தில் லுங்கி அணியில் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பிளே ஆப் சுற்றில் விளையாடுவது உறுதியான பின் லுங்கி அணியில் எடுக்கப்படலாம்.
நிலக்கடலை
இந்த நிலையில் இவர் தன்னுடைய சிறு வயதில் நடந்த சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அதன்படி சின்ன வயதில் தன்னுடைய தம்பியுடன் சேர்ந்து சாலை ஓரத்தில் நிலக்கடலை விற்றதாக கூறியுள்ளார். அதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றுள்ளார். அந்த பணத்தை அம்மாவிடம் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
மரணம்
அவருடைய தந்தை சென்ற வாரம் மரணம் அடைந்துவிட்டார். இதற்காக லுங்கி தற்போது தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். அவர் இன்னும் ஒரு வாரத்திற்கு பின் வந்து சென்னை அணியில் இணைவார். ஆனால் விளையாடும் அணியில் இருப்பது சந்தேகம்தான் .