சூப்பர் கேப்டன்சி
அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, அவரை வைத்து எல்லோரும் கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது 9 போட்டிகளில், 3 போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி, 6ல் வென்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு பஞ்சாப் அணியை கொண்டு வந்துள்ளார். அஸ்வின் கேப்டன் ஆன பின் பேட்டிங், பீல்டிங்கிலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார். கோஹ்லி, டோணி, ரோஹித் போன்ற முக்கியமான கேப்டன்களுக்கு போட்டியாக அணியை வழிநடத்திக் கொண்டு உள்ளார்.
சென்னை
அஸ்வின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அப்போதே ஏப்ரல் 15ம் தேதியை சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து வைத்துக் கொண்டார்கள். டோணியும், அஸ்வினும் மோதும் போட்டி எப்படி இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். அஸ்வின் தன் குரு தோனியவே வீழ்த்தி, சென்னை அணியை தோற்கடித்தார். இப்போது பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணியுடன் பஞ்சாப் தீவிரமாக போட்டியிட்டு வருகிறது.
அஸ்வின் எப்படி
இந்த நிலையில் அஸ்வினை குறித்து பஞ்சாப் வீரர் ஆரோன் பின்ச் முக்கியமான விஷயம் ஒன்று கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில் ''அஸ்வினிடம் மிகவும் சிறந்த தலைமை பண்பு இருக்கிறது. போட்டிக்கு முன் நாள் எல்லா வீரரையும் தனியாக சந்தித்து பேசுகிறார். ஒன்றுக்கு இரண்டு திட்டம் போட்டு களத்தில் இறங்கி ஆடுகிறார். எந்த வீரரை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது. அவர் இதற்கு முன் பல வருடம் கேப்டனாக இருந்தது போல செயல்படுகிறார்'' என்றுள்ளார்.
அப்படியே தோனி
தோனி சொன்னால் களத்தில் சாக கூட தயார் என்று அஸ்வின் குறிப்பிட்டு இருந்தார். அதை குறிப்பிட்ட பின்ச் ''அஸ்வினிடம் தோனியின் சாயல் தெரிகிறது. அவரைப்போலவே அஸ்வின் மிகவும் அமைதியாக இருக்கிறார். எந்த விஷயத்தையும் தலையில் ஏற்றுக் கொள்வதில்லை. கடைசி நேரத்தில் மிகவும் கூலாக செயல்படுகிறார். தோனியிடம் இருந்து அவர் நிறைய கற்றுக் கொண்டுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.