
சென்னை எடுக்கவில்லை
ஆனால் சென்னை அணி இதுவரை எந்த வீரர்களையும் ஏலம் எடுக்கவில்லை. இதுவரை ஒரு வீரரை கூட சென்னை அணி ஏலம் எடுப்பதற்காக கேட்கவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

என்ன காரணம்
இதற்கு காரணமும் உள்ளது. சென்னை அணிதான் இருப்பதிலேயே குறைவான பணம் வைத்துள்ளது. சென்னை அணியிடம் 8.4 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. சென்னை அணி 2 இந்திய வீரர்களை மட்டுமே எடுக்க முடியும் . வெளிநாட்டு வீரர்களை இந்த ஏலத்தில் சென்னை அணி எடுக்க முடியாது.

காத்திருக்கிறது
இதனால் சென்னை அணி நல்ல வீரர்களை தேர்வு செய்வதற்காக காத்து இருக்கிறது. இரண்டு நல்ல உள்ளூர் வீரர்களை அணியில் எடுப்பதற்காக சென்னை அணி காத்து இருக்கிறது.

காமெடி செய்து வருகிறது
இந்த நேரத்தில் வெட்டியாக இருக்க கூடாது என்பதால் சென்னை அணி, காமெடியாக டிவிட் செய்து வருகிறது. டிவிட்டரில் சிஎஸ்கே நிர்வாகிகள் இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் காமெடி தொடங்கி பல காமெடிகளை போஸ்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











