பெரும் தொகை
2019 ஐபிஎல் தொடரில் வெற்றி பெரும் அணி 25 கோடி ரூபாய் பரிசுத் தொகையை வெல்லும். அதே சமயம் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும்.
சிஎஸ்கேவுக்கு எவ்வளவு?
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் 25 கோடி ரூபாய் வெல்லும். தோல்வி அடைந்தாலும் சென்னை அணிக்கு 12.5 கோடி ரூபாய் கிடைக்கும். இதில் பாதித் தொகை வீரர்களுக்கும், மீதத் தொகை அணிக்கும் சென்று சேரும்.
மேலும் இரண்டு அணிகள்
மேலும், தொடரில் மூன்றாம் இடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 10.5 கோடியும், நான்காம் இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு 8.5 கோடி ரூபாயும் பரிசாக கிடைக்கும். ஐபிஎல் அணிகளின் விளம்பர வருவாய் மற்றும் டிக்கெட் விற்பனை பங்கு ஆகியவற்றை கணக்கிட்டால், இந்த பரிசுத் தொகை குறைவு தான்.
வீரர்களுக்கு பரிசு
இது தவிர தனிப்பட்ட வீரர்களுக்கு பல திறன்களின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும். அதிக ரன்கள் குவித்த வீரருக்கும், அதிக விக்கெட்கள் எடுத்த பந்துவீச்சாளருக்கும் தலா 10 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
மதிப்புடைய வீரர்
இது தவிர அதிக மதிப்புடைய வீரர் என்ற பெயரில் களத்தில் வீரர்களின் செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடம் பெரும் வீரருக்கும் 10 லட்ச ரூபாய் பரிசாக கிடைக்கும்.