ஆனால் என்ன
ஆனால் அதே கொல்கத்தா தற்போது பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் ஆடி இருக்கும் கொல்கத்தா 5 போட்டிகளில் வென்றுள்ளது. அதிலும் நேற்று போட்டியில் வெறும் 84 ரன்கள் மட்டுமே எடுத்து மிக மோசமான ரன் ரேட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. பெங்களூருக்கு எதிரான தோல்வி கொல்கத்தா அணியை மொத்தமாக உடைத்து போட்டுள்ளது.
ஏன் இப்படி
கொல்கத்தா அணி இந்த சீஸனின் தொடக்கத்தில் நன்றாக ஆடி வந்தாலும் தற்போது பெரும் சரிவை சந்தித்து உள்ளது. மோசமான ரன் ரேட் காரணமாக அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பே பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. நன்றாக இருந்த கொல்கத்தா அணி மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் சரிவு காரணமாக ஹைதரபாத், பஞ்சாப் அணிகளுக்கு பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
கொல்கத்தா
கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருந்த போது அந்த அணி 7 போட்டிகளில் மொத்தம் 4 போட்டிகளில் வென்றது. வெற்றிபெற கூட முடியாத போட்டிகளில் எல்லாம் கொல்கத்தா வென்றது. இதன் காரணமாக கொல்கத்தா அணியின் ரன் ரேட் கூடியது. இதன் காரணமாக புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் கொல்கத்தா இருந்தது.
ஆனால் என்ன
ஆனால் அதன்பின் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் பதவி விலகினார். தன்னுடைய தனிப்பட்ட பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டுமே என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டார். இதன் காரணமாக இயான் மோர்கன் கேப்டனாக பதவி ஏற்றார். ஆனால் இவர் கேப்டன் ஆன பின் நடந்த மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே கொல்கத்தா வென்றது
சரிவு
அதிலும் எல்லா போட்டியிலும் மிக மோசமான ரன் ரேட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி அடைந்துள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகியதுதான் அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார்கள். ஒரு தொடரின் பாதியில் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக கூடாது. இது அணியை மேலும் பாதிக்கும்.
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் அந்த தவறை செய்துவிட்டார். இதன் காரணமாகவே தற்போது கொல்கத்தா அணி கடுமையாக திணறி வருகிறது. தினேஷ் கார்த்திக் தொடர் முடியும் வரை கேப்டனாக இருந்திருக்க வேண்டும், என்று பலரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.இன்னொரு பக்கம் தினேஷ் கார்த்திக் பதவி விலகவில்லை. ஷாருக்கான்தான் தினேஷ் கார்த்திக் பதவி விலக காரணமாக இருந்தார்.
அழுத்தம்
ஷாருக்கான்தான் தினேஷ் கார்த்திக்குக்கு அழுத்தம் கொடுத்தார். தினேஷ் கார்த்திக் அவமானப்படுத்தப்பட்டார். இதன் காரணமாகவே அவர் பதவி விலகினார். இதனால் தான் தற்போது கொல்கத்தா அணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு
ஷாருக்கானும் கொல்கத்தா அணி நிர்வாகமும் இப்படி செய்திருக்க கூடாது என்று இன்னும் சிலர் விமர்சனம் வைத்து இருக்கிறார்கள். யார் சொன்னாலும்.. நன்றாக இருந்த டீம் தற்போது கேப்டன்சி மாற்றம் காரணமாக கடுமையான சரிவை சந்தித்து உள்ளது என்பதே நிதர்சனம்.