
விலகினார்
இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகுவதாக அறிவித்துள்ளார். தனது விலகல் குறித்து சில மணி நேரங்களுக்கு முன்புதான் தினேஷ் கார்த்திக் முடிவு எடுத்தார். இது தொடர்பாக அவர் அணி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

அறிவிப்பு
அதோடு இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு கொல்கத்தா அணி நிர்வாகத்தின் இணைய பக்கத்தில் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவாரா என்று கேள்வி எழுந்தது.

நீக்கம்
சிறப்பான அணி இருந்தும் கொல்கத்தா பெரிய அளவில் வெற்றிகளை குவிக்கவில்லை. இதனால் கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவாரா என்று கேள்விகள் இருந்தது. அதோடு அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தினேஷ் கார்த்திக் மீது கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வந்தது.

வெளியேற்றம்
இந்த நிலையில்தான் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் முடிவு செய்து இருக்கிறார். இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் மோர்கன் கேப்டனாக பதவி ஏற்பார் என்று கூறுகிறார்கள்.

தினேஷ் கார்த்திக்
கடந்த சில போட்டிகளில் மட்டுமே தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டார். 7 போட்டிகளில் ஆடி இருக்கும் கொல்கத்தா 4 போட்டிகளில் வென்றுள்ளது.பஞ்சாப் , சிஎஸ்கேவை வீழ்த்திய போது தினேஷ் கார்த்திக் பாராட்டப்பட்டார். ஆனால் கடைசி போட்டியில் கொல்கத்தா தோல்வி அடைந்த நிலையில் தினேஷ் கார்த்திக் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று மும்பை போட்டிக்கு முன்னதாக பதவி விலகி உள்ளார்.உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு கோப்பை வாங்கி கொடுத்த இயான் மோர்கன் அணியின் கேப்டன் ஆகிறார்.


Click it and Unblock the Notifications