
ஏன் மாறியது
துபாய் ஹோம் மைதானம் என்பதால் அதை சிஎஸ்கே எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள முடியும். இதனால் இந்த மைதானத்தில் இருக்கும் பிட்ச்களை சேப்பாக்கம் மைதானம் போல சிஎஸ்கே மாற்றியது. ஆனால் இதுவே தற்போது சிஎஸ்கேவிற்கு எதிராக முடிந்துள்ளது. துபாய் மைதானம் முழுக்க முழுக்க ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக மாறியுள்ளது.

மாறியது
அதிலும் இந்த ஸ்பின் நேரம் நேரம் செல்ல செல்ல வறண்டு போகிறது. இதனால் இரண்டாவாது இன்னிங்சில் பவுலிங் செய்ய எளிதாக இருக்கிறது. இரண்டாவது இன்னிங்சில் ஸ்பின் பவுலிங் செய்ய துபாய் பிட்ச் வசதியாக உள்ளது. இதுதான் சிஎஸ்கே தோல்விக்கும் காரணமாக அமைத்துள்ளது. இதுவரை நடந்த 7 போட்டிகளிலும் சிஎஸ்கேதான் சேசிங் செய்துள்ளது.

பிட்ச்
அதிலும் துபாயில் நடந்த போட்டியில் எல்லாம் சிஎஸ்கேதான் சேசிங் செய்துள்ளது. இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும் போது சிஎஸ்கே மோசமாக திணறுகிறது. ஸ்பின் பவுலிங் நன்றாக இருக்கிறது, ஸ்பீட் பவுலிங்கும் இரண்டாவது இன்னிங்சில் நன்றாக ஸ்விங் ஆகிறது என்பதால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறுகிறார்கள்.

தோனி
அதிலும் துபாய் பிட்சில் சிஎஸ்கேவின் முக்கியமான சில வீரர்கள் அதிகம் திணறுகிறார்கள். தோனி, வாட்சன், ராயுடு, சாம் கரன், ஜாதவ் ஆகியோர் துபாய் பிட்சில் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். இதற்கு காரணம் இந்த பிட்ச்தான். முதல் இன்னிங்சில் சிஎஸ்கே ஸ்பின் கை கொடுப்பது இல்லை.. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் ஆட்டம் மாறிவிடுகிறது. மிகவும் வறட்சியாக பிட்சில் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டு சேசிங் செய்வது கடினம்.. சிஎஸ்கேவின் தோல்விக்கு இதுதான் காரணம் என்றும் கூறுகிறார்கள்.

எப்படி
அதோடு தோனி, வாட்சன் வந்தாலே எதிரணி வீரர்கள் ரஷீத் கான், நரேன், வாஷிங்க்டன் சுந்தர் போன்ற ஸ்பின் பவுலர்களைதான் கொண்டு வருகிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் மோசமாக திணறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கேவிற்கு இன்னும் சில போட்டிகள் இதே துபாய் மைதானத்தில் நடக்கும் என்பதால்.. மொத்த தொடரும் சிஎஸ்கேவிற்கு எதிராக செல்ல கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள.


Click it and Unblock the Notifications











