
களத்திற்கு வந்தார்
19வது ஓவரில் ரஷீத் கான் பேட்டிங் செய்து வந்தார். அந்த ஓவரின் 2வது பந்தை ரஷீத் கான் அடிக்க முயன்றார். ஆனால் ஷர்துல் தாக்கூர் மீண்டும் பந்தை மிகவும் அகலமாக ஆப் திசையில் வீசினார். பந்து வைட் போல இருந்த காரணத்தால் களத்தில் இருந்த நடுவர் வைட் கொடுக்க சென்றார். கடைசி நொடியில் நடுவர் என்ன நினைத்தாரோ தனது முடிவை மாற்றினார்.

நடுவர் முடிவை மாற்றினார்
நடுவர் வைட் கொடுக்க சென்ற போது, அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷரதுல் தாக்கூர் கோபமாக நடுவரை பார்த்து கத்தினார். தோனியும் கோபமாக நடுவரை பார்த்து கத்தினார். எப்படி வைட் கொடுப்பீர்கள் என்பதை போல நடுவரை பார்த்து கோபமாக கத்தினார். இதனால் வைட் கொடுக்க சென்ற நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

உண்மை என்ன
ஆனால் அதன்பின் காண்பிக்கப்பட்ட ரிப்ளேவில் பந்து வைட் கோட்டிற்கு வெளியே சென்றது தெரிய வந்தது. நடுவர் ஏன் தனது முடிவை மாற்றினார் என்று தெரியாத நிலையில் தோனிக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் தோனி ஒரு கேப்டனாக செயல்பட்ட விதம் சரிதான் என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

என்ன சொல்கிறார்
இந்த நிலையில் தோனி செய்தது தவறு இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். அதில், தோனி ஒரு கேப்டனாக அப்படி செயல்பட்டார். அவர் நடுவரை மிரட்டவில்லை. தனது அணிக்காக குரல் கொடுத்தார். அதற்கு முதல் ஓவரில்தான் பவுண்டரி, சிக்ஸர் சென்றது. இதனால் தோனி அப்படி குரல் கொடுத்தார்.

தவறு இல்லை
இதில் தவறு இல்லை. பேட்ஸ்மேன் கொஞ்சம் தள்ளி நின்று ஆடினார். இதனால் அது வைட் இல்லாமல் இருக்குமோ என்று நடுவரிடம் தோனி அப்படி செயல்பட்டார். இதை தவறு என்றெல்லாம் கூற முடியாது. போட்டியின் இறுதி இரண்டு ஓவர்கள் மிகவும் திரில்லாக இருந்தது என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். கவாஸ்கரே இப்படி தோனிக்கு ஆதரவாக பேசிவிட்டதால்.. இனி இதில் விவாதத்தை தவிர்க்க வேண்டும் என்று தோனி ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications