
தேர்வு
ஐபிஎல் தொடரில் இவரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடராஜன் அணியில் தேர்வாகி உள்ளார். இவர் முதலில் நெட் பவுலராக மட்டுமே தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்
இந்த நிலையில் நடராஜனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடராஜனுக்கு போன் செய்த ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட் செய்துள்ள ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

பேசினேன்
நான் நடராஜன் உடன் போனில் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்! அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்!, என்று ஸ்டாலின் வாழ்த்தி டிவிட் செய்துள்ளார் .

செம
இந்திய அணியில் தேர்வாகி இருக்கும் நடராஜன் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளார். முக்கியமாக இந்திய அணிக்கு இவர் டெத் ஓவர்களில் பவுலிங் செய்ய வாய்ப்புள்ளது. இவரின் யார்க்கர் ஆஸ்திரேலிய மைதானத்தில் எப்படி ஈடுபடும் என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர்..இந்த நிலையில்தான் நடராஜனை யார்க்கர் புயல் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications