
பிளே-ஆஃப்
2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவடைந்து பிளே-ஆஃப் சுற்று துவங்கி உள்ளது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி முழு படையுடன் களமிறங்கியது.

முக்கிய வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக் போட்டியில் முக்கிய வீரர்களான பும்ரா, ட்ரென்ட் போல்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளித்து இருந்தது. அவர்கள் மூவரையும் முக்கியமான இந்தப் போட்டியில் களமிறக்கியது மும்பை அணி.

அஸ்வின்
டெல்லி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த லீக் போட்டியில் டெல்லி அணியில் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் காலில் காயம் அடைந்து இருந்தார். அவர் இந்தப் போட்டியில் முழு உடற்தகுதியுடன் பங்கேற்றார்.

சிக்கல்
இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. எனினும், இரு அணிகளும் பலமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications