
என்ன
இந்த நிலையில் இந்திய அணியில் படிக்கலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் ஓப்பனிங் வீரராக களமிறங்க படிக்கலுக்கு வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் தவான் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம். அவர் இப்போது நல்ல பார்மில் இருக்கிறார்.

ஆனால் வயது
ஆனால வயோதிகம் காரணமாக தவான் இரண்டு வருடங்களில் ஓய்வு பெறலாம். அதற்கு பின் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் களமிறங்க புதிய ஓப்பனிங் வீரரை தேட வேண்டும். ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்கும் வீரரை தேர்வு செய்ய வேண்டும். இதில் படிக்கல் தேர்வாக வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

கங்குலி
இதற்கு பதில் அளித்துள்ள கங்குலி படிக்கல் மிகவும் திறமையான வீரர். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க காலத்தில் அவர் இருக்கிறார். ரஞ்சி கோப்பை போட்டியில் அவரை பார்த்து இருக்கிறேன். அவர் நன்றாக ஆடினார்.

சில சீசன்
அவர் இன்னும் சில சீஸன்கள் ஆட வேண்டும். அடுத்த சீசன் இன்னும் கஷ்டமாக இருக்கும். இந்தியாவிற்கு வலிமையான ஒப்பனர்கள் தேவை. படிக்கலுக்கு தகுந்த வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். அவர் தொடர்ந்து ஆட வேண்டும்,என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி
கங்குலியின் இந்த பேட்டி பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்திய அணிக்கு வலிமையான ஒப்பனர்கள் தேவை என்று அவர் கூறியுள்ளார் . அதோடு படிக்கல்லையும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வரும் வருடங்களில் படிக்கலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு.. தவான் புறக்கணிக்கப்படுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications