
காரணம் ஏன்
இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் நவ்தீப் சைனி, டெல்லி வீரர் மார்க்ஸ் ஸ்டாய்னிசை நோக்கி பந்தை வேகமாக வீசினார். நெஞ்சை நோக்கி பந்தை வீசி எறிந்தார். அவரை தாக்குவது போல இவர் பந்தை வீசினார். அதிலும் இந்த பந்து 145 கிமீக்கும் அதிகமான வேகத்தில் வந்தது. இதனால் ஸ்டோய்னிசுக்கு கையில் கூட காயம் ஏற்பட்டது.

மோசம்
இப்படி மோசமாக பந்து வீசிய நவ்தீப் சைனி நேற்று ஸ்டோய்னிசிடம் இதற்காக மன்னிப்பு கூட கேட்கவில்லை. திமிராக பவுலிங் வீசிய போதிலும் கூட நவ்தீப் சைனி அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை. இந்த போட்டியில் மட்டும் நவ்தீப் சைனி இப்படி பந்து வீசவில்லை. இதற்கு முன் மும்பைக்கு எதிரான போட்டியிலும் இதேபோல்தான் நவ்தீப் சைனி வீரர்களின் நெஞ்சை குறி வைத்து பந்தை வீசினார்.

மீண்டும்
அப்போதே நவ்தீப் சைனியை கோலி கண்டித்து இருந்தார். ஆனால் நவ்தீப் சைனி மாறவில்லை. அதற்கு பின் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இதேபோல் நவ்தீப் சைனி இதேபோல் செயல்பட்டார். ராஜஸ்தான் வீரர் ராகுல் திவாதியாவை நோக்கி இதேபோல் நவ்தீப் சைனி பந்தை வீசினார். நெஞ்சை குறி பார்த்து இதேபோல் அவர் பந்தை வீசி எறிந்தார்.

விழுந்தார்
அப்போது பந்து அடித்த அதிர்ச்சியில் ராகுல் திவாதியா கீழே விழுந்து துடித்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் இவர் நெஞ்சை குறி பார்த்து பந்து வீசி உள்ளார். இவரின் இந்த செயல் கடமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இவருக்கு எதிராக பலரும் டிவிட் செய்து வருகிறார்கள்.

விமர்சனம்
கோலி சொல்லியும் இவர் கேட்கவில்லை. இவரை ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்க வேண்டும். வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம். விக்கெட் முக்கியம் இல்லை. ஆர்சிபி அணி நிர்வாகம் உடனே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











