
நீக்கம்
இந்த நிலையில் கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் இருந்து பியூஷ் சாவ்லா நீக்கப்பட்டுள்ளார். இதற்கு பதிலாக தற்போது அணியில் கரண் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் பியூஷ் சாவ்லா நன்றாக பவுலிங் செய்து வந்தார். ஒவ்வொரு போட்டியிலும் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார்.

ஆனால் நீக்கம்
ஆனாலும் இவர் நீக்கப்பட்டு உள்ளார். இவருக்கு பதிலாக இன்னொரு லெக் பிரேக் கூக்ளி பவுலரான கரன் சர்மா அணிக்குள் வந்துள்ளார். பியூஷ் சாவ்லா நீக்கப்பட்டதற்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணமாக இவர் பழைய கொல்கத்தா வீரர் என்பதால் பாதுகாப்பு கருதி அணியில் எடுக்கவில்லை. அடுத்ததாக இவர் கடந்த நான்கு போட்டிகளாக விக்கெட் எடுத்தாலும் அதிகம் ரன் கொடுக்கிறார் .

வேகம்
முக்கியமாக ஸ்பின் போடும் இவரால் பவுலிங் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 95 கிமீ வேகம் வரை இவர் பவுலிங் செய்கிறார். இவருக்கு தோனி அறிவுரை வழங்கியும் மாறவில்லை. இதே வேகத்தில் கொல்கத்தாவில் இருக்கும் ரசல், இயான் போன்ற வீரர்களுக்கு பந்து வீசினால் அது சிஎஸ்கேவிற்கு சிக்கலாகும். இதனால் ஸ்லோ பாலில் கூக்ளி வீசும் கரன் சர்மா அணிக்குள் வந்துள்ளார்.

வேறு என்ன காரணம்
அதேபோல் கடந்த 4 போட்டிகளிலும் இவரின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. அதிலும் அணியின் பயிற்சியாளர் பிளமிங் வெளிப்படையாக குற்றச்சாட்டு வைக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தற்போது வேகமாக ஓட கூடிய, நன்றாக பீல்டிங் செய்ய கூடிய சர்மா அணிக்குள் வந்துள்ளார்.

பேட்டிங்
தற்போது அணியில் இருக்கும் 10 பேர் பேட்டிங் செய்ய கூடியவர்கள். பியூஷ் சாவ்லா மட்டுமே பேட்டிங் செய்ய மாட்டார். இந்த நிலையில் தற்போது 11வதாக கரன் சர்மா அணிக்குள் வந்துள்ளார். இவரும் கடைசி நேரத்தில் அணிக்குள் வந்து நன்றாக பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications