
விக்கெட்டுகள்
வரிசையாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில் கடைசி நேரத்தில் வந்த தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். வெறும் 29 பந்துகள் பிடித்த தினேஷ் கார்த்திக் 58 ரன்கள் எடுத்தார் . இதில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி அடக்கம். இன்னொரு பக்கம் சுப்மான் கில் 57 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

அதிரடி
அதன்பின் இறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது. பஞ்சாப் அணியின் ஓப்பனிங் வீரர்கள் கே. எல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோரின் விக்கெட்டை எடுக்க முடியாமல் கொல்கத்தா வீரர்கள் திணறினார்கள். இரண்டு பேருமே அரை சதம் அடித்து அதிரடி காட்டி வந்தனர் .

ராகுல் எப்படி
இந்த நிலையில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் கே. எல் ராகுல் அடித்த பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் இருந்த ஆண்ட்ரு ரசல் பிடிக்கலாம் என்று வேகமாக ஓடினார். ஆனால் அவரால் அந்த பந்தை கேட்ச் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் அந்த பந்தை பவுண்டரி செல்லாமல் தடுக்க முயன்றார். வேகமாக ஓடி சென்று பவுண்டரி செல்லாமல் அந்த பந்தை தடுக்க முயன்றார்.

ரஸல் விழுந்தார்
ஆனால் அந்த பந்தை ரசலால் தடுக்க முடியவில்லை. அதே சமயம் அவர் ஓடிய வேகத்தில், வேகமாக சென்று பவுண்டரி தடுப்பில் மோதி கீழே விழுந்தார். இவரின் காலில் அப்போது பலத்த காயம் ஏற்பட்டது. பவுண்டரி தடுப்பில் வேகமாக மோதியதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

துடித்தார்
இந்த நிலையில் அவர் வலியால் துடித்தார். நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார். கீழேயே விழுந்து கஷ்டப்பட்டார். அதன்பின் அவரை சக வீரர்கள் வந்து தூக்கியபடி அழைத்து சென்றனர். நடக்க முடியாமல் பாதி போட்டியில் அவர் கஷ்டப்பட்டபடி வெளியேறினார். இவர் நடந்து சென்றதை பார்க்கவே பலரும் அதிர்ச்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications