
தொடக்கம்
டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட், டுப்ளசிஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் இன்றி 51 ரன்கள் எடுத்தது.

சுரேஷ் ரெய்னா
ஆனால் இந்த ஜோடியை பிரிக்க முயன்ற கோலிக்கு 10 ஓவரில் தான் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக ஆடி வந்த ருத்ராஜ் கெயிக்வாட் 33 ரன்களுக்கு சஹார் பந்துவீச்சில் அவுட்டானார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 74 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேர்த்தது. மொயின் அலி காயம் காரணமாக அணியில் இடம்பெறாததால் 2வது விக்கெட்டிற்கு சுரேஷ் ரெய்னா களமிறங்கினார்.

டிவில்லியர்ஸ்
யுவேந்திர சஹார் வீசிய ஓவரில் தனது முதல் பந்தை சந்தித்த ரெய்னா அடித்த பந்து ஸ்டம்பிற்கு சற்று அருகிலேயே விழுந்தது. இதனையடுத்து ரெய்னா சிங்கிள் எடுக்க முயன்றார். அப்போது வேகமாக செயல்பட்ட ஆர்சிபி கீப்பர் டிவில்லியர்ஸ் உடனடியாக அந்த பந்தை எடுத்து மறுமுனையில் இருக்கும் ஸ்டம்ப்பிற்கு வீசினார். ஆனால் மறுமுனையில் நின்று அவுட் செய்ய வேண்டிய சஹால் ஸ்டம்பிற்கு அருகில் வரவில்லை.

தவறிய வாய்ப்பு
சஹால் மட்டும் ஸ்டம்பிற்கு அருகில் உடனே சென்றிருந்தால் சுரேஷ் ரெய்னா அவுட்டாகியிருப்பார். இதனால் கோபமடைந்த டிவில்லியர்ஸ் ஏன் ஸ்டம்பிற்கு அருகில் செல்லவில்லை என்பது போல் சஹால் மீது அதிருப்தி அடைந்தார். அதிரடி வீரராக பார்க்கப்படும் ரெய்னாவை விக்கெட் எடுக்க வாய்ப்பு கிடைத்தபோதும் சஹாலின் தவறால் அது பறிபோனது.


Click it and Unblock the Notifications











