ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல் அரங்கில் ஒரு வேடிக்கையான விஷயம் ஒவ்வொரு ஆண்டும் பேசப்படும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விடுவிக்கும் வீரர், வேறு ஒரு அணியில் இணைந்து சிறப்பாக செயல்படுவார். இந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ்-ஐ விடுவித்துள்ளது அந்த அணி.
கிறிஸ் மோரிஸ்
2020 ஐபிஎல் தொடரில் கிறிஸ் மோரிஸ் பேட்டிங்கில் பெரிய அளவில் அணிக்கு கை கொடுக்கவில்லை. ஆனால், அவர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். ஆனாலும், அவர் காயத்தால் பல போட்டிகளில் ஆடவில்லை. அவரை இந்த ஆண்டு விடுவித்து இருக்கிறது பெங்களூர் அணி.
அறிமுகம்
அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கும் என்ற பேச்சு அடிபடுகிறது. கிறிஸ் மோரிஸ், 2013 ஐபிஎல் தொடரில் முதன்முறையாக சிஎஸ்கே அணியில் தான் அறிமுகம் ஆனார். சிஎஸ்கே அணிக்கும் இப்போது ஆல்-ரவுண்டர் தேவை என்பதால் அவரை வாங்க வாய்ப்பு அதிகம்.
சிஎஸ்கே என்ன செய்யும்?
சிஎஸ்கே அணி இந்த சீசனில் பல புதிய வீரர்கள் அணியில் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியிடம் சுமார் 19 கோடி கையிருப்பு உள்ளது. அந்த தொகையை வைத்து இளம் வீரர்களையும், அனுபவ வீரர்களையும் அந்த நை ஏலத்தில் தேர்வு செய்யும்.