கொல்கத்தா அணி
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் சீரான வேகத்தில் விக்கெட்களை பறிகொடுத்து ரன்களை உயர்த்தி வருகிறது. சுப்மன் கில் 9 ரன்கள் மற்றும் வெங்கடேஷ் ஐயர் 18 ரன்கள் எடுத்து ஏமாற்ற பின்னர் வந்த ராகுல் திரிபாதி நிதிஷ் ராணா ஆகியோர் அதிரடி காட்டி ரன்களை குவித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டிக்கு இடையே சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டூப்ளசிஸுக்கு காயம்
சென்னை அணியின் நட்சத்திர வீரரான ஃபாஃப் டூப்ளசிஸ் கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட பெவிலியனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆட்டத்தின் 3வது ஓவரில் தீபக் சஹார் வீசிய 2வது பந்தை வெங்கடேஷ் ஐயர் தூக்கி அடிக்க முயன்றார். பிட்ச்-க்கு அருகிலேயே மிகவும் அழகாக வந்த கேட்ச்-ஐ ஃபீல்டிங்கில் நின்றுக் கொண்டிருந்த டூப்ளசிஸ் டைவ் அடித்து பிடிக்க முயன்றார்.
விரல்களில் ரத்தம்
மிகவும் கீழாக சென்ற பந்தை பிடிப்பதற்காக கைகளை மிக கீழ் கொண்டு சென்றதால் டூப்ளசிஸின் விரல்கள் மைதானத்தின் தரையில் தேய்ந்தது. இதனால் அவர் விரல்களில் வலி தாங்க முடியாமல் சிரமப்பட்டார். ஏற்கனவே விரல்களில் அதிக காயங்களுடன் டேப் போட்டிருந்த டூப்ளசிஸுக்கு மீண்டும் அங்கேயே அடிபட்டதால் காயம் அதிகமாகி ரத்தம் வரத் தொடங்கியது. இதே போல கால்களிலும் நல்ல அடிபட்டு ரத்தம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அவர் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எமனான அபுதாபி
இந்த மைதானம் டூப்ளசிஸுக்கு எமனாக விளங்கி வருகிறது. இந்தாண்டு இங்கு நடைபெற்ற நடைபெற்ற பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடரின் போது கட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய டூப்ளசிஸ் பவுண்டரிக்கு சென்ற பந்தை முயன்றார். அப்போது சக வீரர் முகமது ஹஸ்னைன் மீது மோதி விபத்தானது. அதாவது டூப்ளசிஸ் முகம், ஹசனின் காலில் பட்டு படு மோசமாக காயம் ஏற்பட்டது.
சுயநினைவு இல்லை
படுகாயமடைந்த டூப்ளசிஸ் சுயநினைவின்றி வெளியில் சில நேரம் உட்காரவைக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு அவர் பழைய நினைவுகள் சிலவற்றை மறந்துவிட்டார் என்றும், சிறிது காலம் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதே போல தற்போதும் காயம் ஏற்பட்டுள்ளது.
அச்சம் தெரிவித்த டூப்ளசிஸ்
இன்றைய ஆட்டத்திற்கு முன்னறும் டூப்ளசிஸ் அச்சம் தெரிவித்திருந்தார். அதில் அபுதாபி மைதானத்தை என்னால் மறக்கவே முடியாது. எனக்கு சுயநினைவே இல்லை. ஆனால் அதற்காகவெல்லாம் என்னால் ஓரமாக உட்கார முடியாது, சிறப்பாக ஃபீல்டிங் செய்வேன் எனக்கூறி களமிறங்கினால். ஆனால் தற்போது அவர் பேட்டிங்கிற்கு களமிறங்குவாரா என்பதிலேயே சந்தேகம் நிலவுகிறது.