
பழித்தீர்க்குமா ஆர்சிபி
இது ஒருபுறம் இருந்தாலும், சிஎஸ்கேவை பழிவாங்க வேண்டிய திட்டத்திலும் ஆர்சிபி முணைப்புட உள்ளது. இந்த தொடரில் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கேவிடம் ஆர்சிபி மோசமான தோல்வியை தழுவியிருந்தது. கடைசி ஓவர் வரை வெற்றி பெரும் நம்பிக்கையுடன் இருந்த ஆர்சிபி, 20 ஓவரில் சொதப்பியது.

ஜடேஜாவின் அதிரடி
இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்தவராக திகழ்ந்த ஹர்ஷல் படேலின் கடைசி ஓவரை ஜடேஜா மரண காட்டு காட்டினார். ஹர்ஷல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, ஒரு இரட்டை ஓட்டம் என மொத்தம் 37 ரன்களை குவித்தார். இந்த ஓவர் தான் ஆட்டத்தையே புரட்டிப்போட்டது. மொத்தம் 28 பந்துகளை சந்தித்த ஜடேஜா 62 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார். இதனால் சிஎஸ்கே அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனை எட்டிப்பிடிக்க முடியாத ஆர்சிபி 122 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
Recommended Video

ஆர்சிபியின் திட்டம்
எனவே தனது ஓவரில் அதிரடி காட்டிய ஜடேஜாவை நிச்சயம் ஹர்ஷல் படேல் பழிவாங்குவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஹர்ஷல் படேலை வைத்து ஆர்சிபி போட்டு வைத்துள்ள திட்டமே வேறு வீரர்களுக்காக உள்ளது. அதாவது டூப்ளசிஸ் மற்றும் அம்பத்தி ராயுடுவை வீழ்த்துவதற்காக ஸ்பெஷலாக
ஹர்ஷல் படேல் கொண்டு வரப்படவுள்ளார். இதற்கு காரணம் பழைய புள்ளிவிவரங்கள் தான்.

ரெக்கார்ட்கள்
டூ பிளசிஸுக்கு எதிராக இதுவரை 13 பந்துகளை வீசியுள்ள ஹர்ஷல் படேல், இரண்டு முறை விக்கெட் எடுத்துள்ளார். அதேபோல், அம்பத்தி ராயுடுவுக்கு எதிராக 36 பந்துகள் வீசி 4 முறை விக்கெட் எடுத்திருக்கிறார். எனவே இன்றைய போட்டியிலும் அவர்கள் இருவருக்காக மட்டும் ஹர்ஷலை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications