
முக்கிய போட்டி
இந்த தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 3வது இடத்தில் இருக்கும் போதிலும், சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறாது. ஏனென்றால் 2வது பாதி தொடரின் முதல் ஆட்டத்திலேயே ஆர்சிபி அணி மோசமான தோல்வியை சந்தித்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான அந்த போட்டியில் 92 ரன்களுக்கு சுருண்டது. கோலி, டிவில்லியர்ஸ் என எந்த வீரராலும் ஸ்கோரை உயர்த்தவில்லை.

வெற்றி கட்டாயம்
அதே போல கடந்த போட்டியில் கோலியின் கேப்டன்சியும் பெரியளவில் தாக்கத்தை கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. அவரின் பவுலிங் திட்டம் கொல்கத்தா அணியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தது. எனவே சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் வெற்றி கணக்கை தொடங்கினால் மட்டுமே வரும் போட்டிகளிலும் நம்பிக்கையுடன் விளையாடி ப்ளே ஆஃப்-க்குள் நுழைய முடியும்.

விராட் கோலிக்கு கெடு
இந்நிலையில் சிஎஸ்கே போட்டியில் மட்டும் ஆர்சிபி தோல்வியை சந்தித்தால் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆர்சிபி அணி நிர்வாகிகளுக்கு இடையே பரபரப்பான ஆலோசனைக்கூட்டம் நடந்ததாகவும், அதில் இந்தாண்டு தொடரிலேயே கோலிக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

கடைசி போட்டி?
விராட் கோலி ஏற்கனவே இந்தாண்டுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். ஆனால் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால், இந்தாண்டே பதவியை இழக்க வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரின் பாதியிலேயே கேப்டன் பதவி விலகுவது புதிதல்ல, ஏற்கனவே கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக், ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications