
செப்.19 அல்லது செப். 20
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது. இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

யூடியூப் நிகழ்ச்சியில்
இத்தகவலை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. காய்ந்து கிடந்த ரசிகர்களுக்கு ஐந்து ரூபாய் குச்சி ஐஸாய் குளுகுளுக்க வைத்தது.

SGM மீட்டிங்
இந்த நிலையில், ஏபிபி நேற்று வெளியிட்ட செய்தியில், "மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள், இங்கிலாந்து - இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில், செப்டம்பர் 18 அல்லது 19 முதல் ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபாயில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் சனிக்கிழமை அன்று பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் SGM மீட்டிங் முடிவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் ரீ ஸ்டார்ட்
உலகக் கோப்பை முடிவு செய்ய, வரும் ஜூன் 1ம் தேதி ஐசிசி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த நிலையில், அதற்கு முன்பாகவே.. அதாவது மே 29ம் தேதி, SGM எனப்படும் 'சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை' பிசிசிஐ கூட்டியுள்ளது. இதில், உலகக் கோப்பையை நடத்துவது குறித்தும், ஐபிஎல் தேதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இறுதியில், ஐபிஎல் ரீ ஸ்டார்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட உள்ளதாகவும் ஏபிபி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ஜூன் 1 அன்று நடக்கும் ஐசிசி மீட்டிங்கின் போது, பிசிசிஐ அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications