
5 நாட்களில் துவக்கம்
ஐபிஎல் 2021 தொடர் இன்னும் 5 நாட்களில் துவங்கவுள்ளது. முதல் போட்டி சென்னையிலும் இரண்டாவது போட்டி மும்பையிலும் நடைபெறவுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில் மும்பையில் மட்டும் 10 ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மகாராஷ்டிராவில் லாக்டவுன்
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பரவிவரும் கொரோனா காரணமாக அங்கு லாக் டவுன்அறிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் வெள்ளி இரவு 8 மணிமுதல் திங்கட்கிழமை காலை 7 மணிவரையிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடைகள் உள்ளிட்டவை மூடப்படவுள்ளன.

நவாப் மாலிக் அறிவிப்பு
இந்த லாக்டவுன் இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அறிவித்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளதாக மாலிக் அறிவித்துள்ளார்.

அதிகமான கொரோனா பாதிப்பு
ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளின் வளாகத்திலேயே வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நேற்றைய தினம் மட்டும் 57,074 புதிய கொரோனா பாதிப்பாளர்கள் மற்றும் 222 கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன.


Click it and Unblock the Notifications