
டாப் 4 இடங்கள்
புள்ளிப்பட்டியலில் ஏற்கனவே லக்னோ மற்றும் குஜராத் அணிகள் 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டியில் ஒரு வெற்றி பெற்றால் கூட ப்ளே ஆஃப் செல்லும். இதே போல 4வது இடத்தில் உள்ள ஆர்சிபி அணி மீதமுள்ள 2 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றால் கூட 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும்.

3 அணிகளுக்கு தலைவலி
இந்த ரேஸில் இருந்த டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் அணிகளுக்கு தலைவலி உருவாகிவிட்டது. டெல்லி அணி சிஎஸ்கேவுடன் தோற்றுவிட்டது. பஞ்சாப் அணி ராஜஸ்தானுடன் தோற்றுவிட்டது. ஐதராபாத் அணி ஆர்சிபியிடம் தோற்றுவிட்டது. இந்த 3 அணிகளுமே தற்போது வரை 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளுடன் உள்ளது. எனவே மீதமுள்ள 3 போட்டியில் ஒன்றில் தோற்றால் கூட ப்ளே ஆஃப் செல்ல முடியாது.

ஒருவேளை வென்றுவிட்டால்
ஒருவேளை இந்த 3 அணிகளில் ஏதேனும் ஒரு அணியாவது 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளையும் பெற்றுவிட்டால், அது ஆர்சிபி அணிக்கு தான் சிக்கல். 4வது இடத்தில் உள்ள ஆர்சிபி தனக்கு மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் இடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரன்ரேட் அடிப்படையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு
இது ஒருபுறம் இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா அணிகள் ஏற்கனவே ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டன. கணக்குகளின் அடிப்படையில் ப்ளே ஆஃப் வாய்ப்புகள் இருந்தாலும், அவை நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவாக இருப்பது தான் உண்மை.


Click it and Unblock the Notifications











