
வெளியேறிய வீரர்கள்
ஒருபுறம் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் போன்ற முன்னணி அயல்நாட்டு வீரர்கள் இன்னும் ஐபிஎல் தொடருக்கே வரவில்லை. மற்றொரு புறம், ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் போட்டுவிட்டு, அயல்நாட்டு வீரர்கள் விலகி வருகின்றனர். குஜராத் அணி வீரர் ஜேசன் ராய், கொல்கத்தா வீரர் அலெக்ஷ் ஹேல்ஸ், ஆர்ச்சர் என முன்னணி வீரர்கள் விலகினர்.

பாதிக்கப்படும் அணிகள்
ஒவ்வொரு சீசனிலும் வீரர்களின் இந்த செயல் அணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் அணி நிர்வாகங்களால் எடுக்க முடியாது. தொடரில் இருந்து பாதியிலேயே விலகினால் கூட சம்பளத்தொகை வழங்கும் அளவிற்கு பிசிசிஐ பாலிசி அமைத்துக்கொடுத்துள்ளது.

பிசிசிஐ-ன் நடவடிக்கை
இந்நிலையில் அதில் மாற்றம் வரவுள்ளது. இதுகுறித்து பேசிய மூத்த அதிகாரி ஒருவர், ஐபிஎல்-ல் முக்கிய முதலீட்டாளர்கள் அணி நிர்வாகங்கள் தான். பல்வேறு ஆலோசனைகள், திட்டங்களுக்கு பிறகு ஒரு வீரரை ஏலம் எடுக்கின்றனர். ஆனால் ஏற்றுக்கொள்ளவே முடியாத காரணங்களை கூறிவிட்டு, வீரர்கள் வெளியேறுவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.

புதிய நடவடிக்கை
இனி ஒரு வீரர் ஐபிஎல்-ல் இருந்து விலகினால் அவரின் காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். அது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லையென்றால், அடுத்த சில ஆண்டுகளுக்கு அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை நியாயமான கோரிக்கை தான் என்றால் விலக்கு அளிக்கப்படும். இதனை செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்லப்படும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications