
மரியாதை
தற்போது கிரிக்கெட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்றும் பலரும் அவரை கொண்டாடி வருகின்றனர். பொதுவாக பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது, மரியாதை செலுத்துவது இந்தியர்களின் வழக்கம். ஆனால் அது மெல்ல மெல்ல, நமக்கு பிடித்த ஹீரோ, கிரிக்கெட் வீரர்கள் காலில் விழுவது என அன்பை வெளிப்படுத்தும் விதமாக மாறிவிட்டது.

ரசிகர்கள் அன்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் காலில் ரசிகர்கள் விழுந்து மரியாதை செலுத்தியதை நாம் பார்ததிருப்போம். ஆனால் ஒரு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர், சக வீரரின் காலில் விழுந்து பார்த்து இருப்போமா. அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று நடந்தது.

மைதானத்தில் சச்சின்
நேற்று புனேவில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரானஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதனால் சச்சின் ரசிகர்கள் மனவேதனையில் இருந்தனர். அப்போது போட்டி முடிந்ததும், எதிரணி வீரர்கள் வெற்றி பெற்ற அணிக்கு வரிசையில் வந்து கைகுலுக்கி சென்றனர். இந்த வரிசையில் மும்பை அணியின் மெண்டராக உள்ள சச்சினும் இருந்து பஞ்சாப் வீரர்களை பாராட்டினார்.

காலில் விழுந்த வீரர்
அப்போது திடீரென்று பஞ்சாப் அணியின் ஃபில்டிங் பயிற்சியாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரூட்ஸ் திடீரென்று சச்சின் காலில் விழ சென்றார். இதனை கொஞ்சமும் கூட எதிர்பார்க்காத சச்சின், காலில் விழ வேண்டாம் என்று எவ்வளவும் தடுத்தார். ஆனால் ரூட்ஸ் சச்சினின் காலை தொட்டு, பின்னர் இருவரும் கட்டி அணைத்து கொண்டனர். இது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











