
ஐபிஎல் சூதாட்ட புகார்
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீண்டும் சூதாட்ட புகார்கள் சூடுபிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மேட்ச் ஃபிக்சிங் மற்றும் சூதாட்ட புகார்கள் எழுந்தது. இதனையடுத்து விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து சதி
அதாவது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தை செய்ய பாகிஸ்தானில் இருந்து ஐடியாக்கள் வந்திருப்பது, அதனை இந்தியாவில் இருந்து செயல்படுத்தியதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்த கும்பல் சூதாட்டம் மூலம் பணம் ஈட்டி, அதனை வங்கி கணக்குகள் மூலம் அயல்நாட்டிற்கு அனுப்பி வந்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்கள் கொடுத்து வங்கி கணக்கு உருவாக்கியுள்ளனர்.

சிஎஸ்கேவுக்கு சிக்கலா?
இந்நிலையில் இந்த சூதாட்ட பிரச்சினையில் தற்போது அனைவரின் பார்வையும் சிஎஸ்கே மீது திரும்பியுள்ளது. ஏற்கனவே சூதாட்ட புகாரில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் அவர்கள் மீதும் விசாரணை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிஎஸ்கே வெளியேறியது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இந்தாண்டு தொடரில் இருந்தே வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications