
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்த நிலையில், மும்பை அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு மோசமாக உள்ளது. நடப்பு சீசனில் மோசமான எக்னாமியை கொண்ட அணியாக மும்பை உள்ளது. கடைசி ஆட்டத்தில் உனாட்கட்டும் சொதப்பியதால் , இன்று மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது.

அர்ஜூன் டெண்டுல்கர்
இந்த தருணத்தில் தான் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், பயிற்சி முகாமில் சிறப்பாக விளையாடி வருகிறார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனாக விளங்கும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை விடுத்தனர்.

பிறந்தநானன்று வாய்ப்பு
மேலும், இன்று சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள் என்பதால், அவரது மகனுக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. தந்தையின் பிறந்தநாளன்று, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, தந்தையின் மனம் குளிர வைக்க வேண்டும் என்று அர்ஜூன் டெண்டுல்கர் ஆசையில் இருந்தார். இது தொடர்பாக ரோகித்திடம் தனது கோரிக்கையை அர்ஜூன் வைத்துள்ளார்.

ரோகித் பிடிவாதம்
ஆனால், ரோகித் சர்மாவோ போதிய அனுபவம் இல்லாததால் முக்கிய போட்டியில் வாய்ப்பு வழங்க முடியாது. மும்பையால் இனி பிளே ஆப்க்கு செல்லவே முடியாது என்ற நிலை வந்தால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இன்று முடியாது என்று வெளிப்படையாக கூறிவிட்டார். இதனால் அர்ஜூன் டெண்டுல்கர் விரக்தியில் இருப்பதாக மும்பை அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











