
பவுல்ட்
மும்பை அணியின் போர் வாளாக திகழ்ந்தவர் டிரெண்ட் பவுல்ட் பும்ராவுடன் புவுல்ட் கூட்டணி போட்டு எதிரணியை கதி கலங்க செய்தார். எனினும் பவுல்ட் கடந்த சீசனில் சரியாக சோபிக்கவில்லை, இதனால் அவரை கிழற்றிவிட்டு, காயத்தில் இருந்த ஜோப்ரா ஆர்ச்சரை மும்பை அணி வாங்கியது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு சென்ற பவுல்ட், நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர் வீசி 23 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

குர்னல் பாண்டியா
இதே போன்று மும்பை அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான குர்னல் பாண்டியாவையும் மும்பை அணி ஏலத்தில் எடுக்காமல் மற்ற அணியிடம் கோட்டைவிட்டது. ஆனால் அவர் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவர் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியதுடன் பேட்டிங்கில் 13 பந்துகளில் 21 ரன்களை விளாசினார்.

ராகுல் சாஹர்
மும்பை அணி மெகா ஏலத்தின் போது சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாஹரை கைவிட்டு, புதிய வீரர்களை தேர்ந்து எடுத்தது. ஆனால் ராகுல் சாஹரோ பஞ்சாப் அணிக்காக களமிறங்கி, 4 ஓவர் வீசி 22 ரன்களை விட்டு கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்தார்.தற்போது அவர் மும்பை அணியில் இருந்திருந்தால், ரோகித் சர்மாவுக்கு பக்க பலமாக இருந்திருக்கும்.
Recommended Video

ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக விளங்கியவர் ஹர்திக் பாண்டியா. ஆனால் அவரை மும்பை அணி தாரை வார்த்தது. தற்போது குஜராத் அணியின் கேப்டனாக தலைமை தாங்கிய ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 33 ரன்கள் ரன்கள் விளாசினார். இதனால் நாம் விட்ட வீரர்கள் எல்லாம், தற்போது சிறப்பாக விளையாடுகிறார்கள் என்ற வேதனையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











