
மும்பை அணிக்கு பின்னடைவு
ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தாலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்துவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் உள்ளது. அதற்காக கடந்த 2 போட்டிகளிலும் பலம்வாய்ந்த ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளை தோற்கடித்து அசத்தியது. இந்த வெற்றி தொடரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கும் போது தான் சூர்யகுமார் யாதவின் விலகல் பின்னடைவை கொடுத்துள்ளது.

காரணம் என்ன
சூர்யகுமார் யாதவுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் வலது கையில் காயம் ஏற்பட்டு தாமதமாக தான் ஐபிஎல் தொடருக்கு வந்தார். தற்போது இடதுகையில் காயம் ஏற்பட்டுள்ளது.

நல்ல ஃபார்ம்
நடப்பு தொடரில் மும்பை அணியின் தூணாக சூர்யகுமார் தான் இருந்தார் எனக்கூறலாம். 8 போட்டிகளில் 303 ரன்களை குவித்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 145.67 மற்றும் சராசரி 43 ரன்களாக உள்ளன. இதில் 3 அரைசதங்கள் அடங்கும். தற்போது அவர் வெளியேறியிருப்பது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவு தான் எனக்கூற வேண்டும்.

அட்டகாச ப்ளான்
ஐபிஎல் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்காவுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மோதுகிறது. இதில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதால், சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு ஃபார்மை நிரூபிக்க சரியான நேரம் ஆகும். எனவே நீண்ட ஓய்வு பெற்று அந்த தொடருக்கு தயாராகும் நோக்கில் தான் தற்போது ஐபிஎல்-ல் இருந்து வெளியேறி இருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications