
ஐபிஎல் புரட்சி
இது குறித்து பேசிய ஐதராபாத் அணியின் வேகப்பந்து பயிற்சியாளரான ஸ்டேயின், ஐபிஎல் மூலம் இந்திய வேகப்பந்துவீச்சு துறையில் ஒரு புரட்சியே வந்துள்ளதாக ஸ்டேயின் கூறினார். பும்ரா, உம்ரான் மாலிக், நடராஜன், புவனேஸ்வர் குமார் போன்ற விதவிதமான வீரர்கள் இன்று கலக்குவதற்கு காரணம் ஐபிஎல் தான் என்று ஸ்டேயின் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐக்கு அறிவுரை
உலக கிரிக்கெட்டிலேயே தற்போது அதிவேகமாக பந்துவீசக் கூடிய நபர் என்றால் உம்ரான் மாலிக்கும், பெகுர்சனும் தான். உம்ரான் மாலிக் இளம் வயதிலேயே நன்கு வேகமாக வீசுகிறார். அவர் நிச்சயம் இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் விளையாடுவார். ஆனால் அவரை பத்திரமாக பிசிசிஐ பார்த்து கொள்ள வேண்டும்.

சீனியர்கள் உதவி
உம்ரான் மாலிக்கிற்கு அதீத அழுத்தம், பனிச்சுமை தரக்கூடாது. உம்ரான் மாலிக் வேகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நான் கற்று தருகிறேன், ஐதராபாத் அணியின் சீனியர் வீரர்களான புவனேஸ்வர் குமார், நட்ராஜன் ஆகியோர் உம்ரான் மாலிக்கிற்கு சிறிய சிறிய யுத்திகளை கற்று தருகிறார்கள. இதில் என்ன ஆச்சரியம் என்றால் உம்ரான் மாலிக் வேகமாக கற்று கொள்கிறார்.

இது ஸ்டெயின் பாடம்
உம்ரான் மாலிக்கிடம் நான் சொல்வது எல்லாம் ஒன்றே ஒன்று தான். அவர் நன்றாக பந்துவீசும் போது தட்டி கொடுத்து ஊக்கம் அளிப்பேன். தவறு செய்தால் அதிலிருந்து கற்று கொண்டு முன்னோக்கி செல்ல கூறுவேன். மேலும் பந்துவீசும் போது பேட்ஸ்மேனால் அழுத்தம் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க ஒரு பந்துவீச வேண்டும். அந்த பந்தை எப்படி வீசுவது என்று கற்று கொள் என்று கூறுவேன்.


Click it and Unblock the Notifications











