
புள்ளிப்பட்டியல் நிலவரம்
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுவிட்டது. எனவே தற்போதைக்கு மீதமுள்ள 3 இடங்களில் லக்னோ , ராஜஸ்தான், ஆர்சிபி அணிகள் தக்கவைத்து வருகின்றன. எனினும் டெல்லி, பஞ்சாப், ஐதராபாத், கொல்கத்தா என 4 அணிகளும், அந்த 4வது இடத்திற்கு கடுமையாக போராடி வருகின்றன.

முக்கிய வாரம்
இந்நிலையில் இந்த வார இறுதி நாட்கள், அதை தீர்மானிக்கின்றன. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
பஞ்சாப் vs ராஜஸ்தான் 3.30PM - ஒருவேளை இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்துவிட்டால், தொடரில் இருந்து வெளியேறிவிடும். ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுவிடும்.
லக்னோ vs கொல்கத்தா 7.30 PM : இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோற்றுவிட்டாலும் ஐபிஎல் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிடும். அதே சமயம் லக்னோ அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு நெருங்கிவிடும்.

ஞாயிறு போட்டிகள்
ஐதராபாத் vs ஆர்சிபி 3.30PM : இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுவிட்டால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளும். ஒருவேளை ஐதராபாத் வென்றுவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் தகுதிகள் நடைபெறுவது உறுதியாகிவிடும்.

டெல்லி நுழையுமா
சிஎஸ்கே vs டெல்லி : சென்னை அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. எனினும் டெல்லி அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை சிஎஸ்கே கெடுக்கலாம். டெல்லி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் பெற்றுள்ளது. எனவே சிஎஸ்கேவுடனும் தோற்றுவிட்டால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு. அதுவும் அதிக ரன்ரேட்டுடன் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











