பெங்களூரு : ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் ஆர் சி பி அணி வெறும் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் தான் வென்று இருக்கிறது. இரண்டு தோல்வியை தழுவி இருக்கிறது.இதற்கு காரணம் ஆர்.சி.பி அணியின் பேட்டிங் தான் விராட் கோலி டுபிளசிஸ் ஆகிய வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிப்பதில்லை.
இதன் காரணமாக ஆர் சி பி அணி கடந்த இரண்டு ஆட்டங்களாக தோல்வியை தழுவி இருக்கிறது.அதுவும் ஆர் சி பி அணி, கடந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தான். பேட்டிங் இறுதியில் வந்து பல போட்டிகளை ஆர்சிபி அணிக்காக கடந்த ஆண்டு தினேஷ் கார்த்திக் வென்று கொடுத்தார்.

கொல்கத்தாவுக்கு எதிராக 8 பந்துகளை எதிர் கொண்டு 9 ரன்களை மட்டுமே தினேஷ் கார்த்திக் எடுத்தார். லக்னோ மணிக்கு எதிராக ஒரு ரன்னும், இன்று டெல்லிக்கு எதிராக டக் அவுட் ஆகியும் பெங்களூர் ரசிகர்களை தினேஷ் கார்த்திக் வெறுப்படைய வைத்திருக்கிறார். நடப்பு தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் மொத்தமாகவே 10 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
இதனால் தினேஷ் கார்த்திக் அணியை விட்டு நீக்க ஆர் சி பி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இருப்பினும் தமது ஃபார்ம் மோசமாக இருப்பதை உணர்ந்து கொண்ட தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளது.