அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு 178 ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயித்துள்ளது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கப் போவத யார் என்பதை தீர்மானிக்க இரு அணிகளும், அகமதாபாத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வ செய்தது.
குஜராத் அணியின் தொடக்க வீரர் விரித்மான் சாஹா ஒரு பவுண்டரி அடித்த நிலையில், ஆட்டத்தின் 3வது பந்தை விரித்திமான் சாஹா தூக்கி அடிக்க முயற்சி செய்தார். அப்போது அந்த கேட்சை பிடிக்க 4 பேர் செற் நிலையில், அதனை போல்டே பிடித்தார். தமிழக வீரர் சாய் சுதர்சன் பொறுமையாக விளையாட 19 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் பவர்பிளேவில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை குஜராத் அணி இழந்தது. இதனையடுத்து ஹர்திக் பாடியா மற்றும் சுப்மன் கில் ஜோடி ஆகியோர் கவுண்டர் அட்டாக் ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அஸ்வின், சாஹல் ஜோடி தங்களது பந்துவீச்சு மூலம் தக்க பதிலடி கொடுத்தனர்.
ஹர்திக் பாண்டியா 28 ரன்களிலும், சுப்மன் கில் 45 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து குஜராத் அணி 11வது ஓவரிலிருந்து 16வது ஓவர் வரை 32 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்த கட்டத்தில் டேவிட் மில்லர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை 5 ரன்களில் இருக்கும் போது ராஜஸ்தான் வீரர்கள் தடுமாறினர்.
இறுதியில், அபினவ் மனோகர் , மில்லர் ஜோடி இறுதியில் அதிரடியாக விளையாடினர். 17வது ஓவரில் 12 ரன்களும், 18வது ஓவரில் 17 ரன்களும், 19வது ஓவரில் 12 ரன்களும், 20வது ஓவரில் 11 ரன்களும் குஜராத் வீரர்கள் எடுக்க முயற்சித்தனர். இதனால் குஜராத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.