
விடுவிப்பு
கடந்த முறை மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதனால், கடந்த தொடரில் யார் எல்லாம் சோபிக்க தவறினார்களோ அவர்களை எல்லாம் மும்பை அணி விடுவித்துள்ளது. கடந்த முறை பந்துவீச்சில் சொதப்பி அதிக ரன்களை விட்டு கொடுத்த இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் உளாட்கட் மற்றும் பாசில் தம்பி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுழற்பந்துவீச்சு மாற்றம்
இதே போன்று மும்பை அணியின் சுழற்பந்துவீச்சு பலமாக இருந்த மாயங் மார்கண்டே, சஞ்சய் யாதவ், முருகன் அஸ்வினும் தற்போது எம்.ஐ. நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களான டேனியல் சாம்ஸ், மெர்டித் ஆகியோரை மும்பை அணி விடுவித்துள்ளது, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பண்ம் எவ்வளவு இருக்கு?
சுழற்பந்துவீச்சு அதிரடி ஆல்ரவுண்டரான வெஸ்ட் இண்டீஸ் வீரர் பெபியன் ஆலனை மும்பை அணி விடுவித்துள்ளதும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மும்பை அணியிடம் மினி ஏலத்தில் 20 கோடியே 55 லட்சம் ரூபாய் எஞ்சியுள்ளது. இந்த பணத்தை வைத்து மும்பை அணி புதிய சுழற்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
ரோகித் சர்மா, டிம் டேவிட், ரமன்தீப் சிங், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஸ்டப்ஸ், டிவால்ட் பிரவீஸ், ஜோப்ரா ஆர்சர், பும்ரா, அர்ஜூன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திக்கேயா, ஹிரித்திக் சோகின், ஜேசன் பெகுரண்டஃப், ஆகாஷ் மந்த்வால்


Click it and Unblock the Notifications