மும்பை : ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறார்கள். விளையாடிய மூன்று போட்டிகளில் தற்போது முதல் வெற்றியை பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு சன்ரைசர்ஸ் அணி முன்னேறி இருக்கிறது.
இந்த தொடரில் தற்போது வெற்றியை பெறாதது மும்பையும் டெல்லி அணிகள் தான். இந்த நிலையில் நடப்பு தொடரில் முதல் தோல்வியை தழுவியது குறித்து ஐதராபாத் அணி கேப்டன் ஷிகர் தவான் கூறியதை தற்போது பார்க்கலாம்.

நான் இன்னிங்ஸ் முடியும்போது 99 ரன்களில் ஆட்டம் இழக்காமல் நிற்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒரு பேட்டிங் யூனிட் ஆக நாங்கள் திட்டத்தை வகுத்து களத்தில் இறங்கினோம். ஆனால் ஆடுகளம் கொஞ்சம் வித்தியாசமாக செயல்பட்டது. எங்கள் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் நிலைத்து நின்று விளையாடி இருக்க வேண்டும்.
ஆனால் அடுத்தடுத்த ஆட்டம் இழந்து விட்டார்கள். நான் 99 ரன்கள் எடுத்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். களத்தின் சூழலுக்கு ஏற்பவே நான் விளையாடினேன் பௌண்டரிகள் தேவைப்படும் போது தான் நான் அடித்தேன் என்று ஷிகர் தவான் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ஹைதராபாத் அணி கேப்டன் மார்கம் இந்த வெற்றி மிகவும் ஸ்பெஷல் ஆனது.
முதலில் கொஞ்சம் தடுமாறினோம். ஆனால் இறுதியில் வெற்றி பெற்றது நினைத்து மகிழ்ச்சி தான். எங்களுடைய ரசிகர்களுக்கு இன்றைய ஆட்டம் திருப்தியை கொடுத்திருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் முன் வெற்றி பெறுவது தான் எங்களுக்கு முக்கியம். நாங்கள் பேட்டிங்கில் எப்படி முன்னேறலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து அதற்கு ஏற்ப முடிவு எடுத்தோம். எங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வைத்தோம்.
மார்க்கண்டே இன்று அபாரமாக பந்து வீசினார். அவரை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். ராகுல் திருப்பாதி விரைவில் பார்முக்கு திரும்புவார் என்று எனக்கு தெரியும். இன்று தனது திறமையை அனைவரும் முன்பு அவர் வெளிக்காட்டி இருக்கிறார். ராகுல் திருப்பாதி விளையாடும்போது எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆட்டம் சுலபமாக இருக்கும். ஹைதராபாத் அணியில் ஒரு அங்கமாக இணைந்து இருப்பது நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் இன்று ஏய்டன் மார்க்கரம் கூறியுள்ளார்.