லக்னோ: ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிஸ்டர் ஐபிஎல் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக 205 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா இதுவரை 5,528 ரன்களை விளாசி இருக்கிறார். 2022 மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே அணியால் கழற்றவிடப்பட்ட சுரேஷ் ரெய்னா, அதன்பின் எந்த அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.
