சென்னை :ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய இறுதி கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எந்த வீரர்களை மினி ஏலத்தில் எடுத்தால் அது நமது அணியின் பலத்தை அதிகரிக்கும் என்பது குறித்து ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் ஆலோசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் உலகக் கோப்பை சாம்பியனும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட்டை, ஆர் சி பி அணி விடுவித்திருப்பது அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் மற்ற அணி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் மூலம் சிஎஸ்கே அணியில் இருக்கும் குறை பெரிய அளவில் தீர்ந்துவிடும். இது சிஎஸ்கே வின் பெரிய பலமாக பார்க்கப்படும். ஆர்சிபி அணி ஏன் அவரை விட்டது என்ற கேள்விக்கு இன்னும் பதில் தெரியவில்லை. இது ஆர்சிபி அணி செய்த மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.