மும்பை : பிசிசிஐ இதை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் அது வரலாற்றுப் பிழையாக இருந்திருக்கும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்கு கவுதம் கம்பீர் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.
அதில் இப்படி நடக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்பது குறித்து பல கேள்விகள் கம்பீரிடம் கேட்கப்பட்டது. அதில் பங்கேற்ற நெறியாளர் கம்பீரிடம், பிசிசிஐ ஐபிஎல் தொடரை தொடங்கவில்லை என்றால் அது எப்படி இருந்திருக்கும் என்று கேள்வி கேட்டார்.

இதனால் ஆஸ்திரேலியா தான் மீண்டும் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கம்பீர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக கம்பீர் உள்ள நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணியிலிருந்து கொல்கத்தா அணிக்கு சென்று அங்கு மென்டராக இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பீரின் அறிவுறுத்தலால் மிட்செல் ஸ்டார்க்கிற்கு 24.75 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அவரை ஏலத்தில் எடுத்தது.