கொல்கத்தா : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் கேகேஆர் அணி வீரர்களுக்கு அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் விளாசப்பட்டது. சிறப்பாக விளையாடிய சுனில் நரைன் 109 ரன்களை விளாசி அசத்தினார்.
