மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே உள்ளது. இதில் பல வீரர்கள் காயத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு வர ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. .
அதில் ரஜத் பட்டிதார் என்ற திறமை வாய்ந்த வீரரை ஆர் சி பி தக்க வைத்துக் கொண்டது. காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடாத ரஜத் பட்டிதார் தற்போது முழு உடல் தகுதியை பெற்று இருக்கிறார்.
